அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் 10 ஊடகவியலாளர் உட்பட 44 பேருக்கு இரத்தின தீப விருது வழங்கி வைப்பு-Photos

வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (21) வடக்கு ஊடக கல்வி கல்லூரியின் நிறுவனர் அ. நபீஸ் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

மலையக கலைகலாசார சங்கம் வழங்கிவரும் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகள் ‘வடக்கு ஊடக கல்வி கல்லூரியின்’ ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தில் சமூக நலன்கொண்டு ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம், ந.கபில்நாத், சு.வரதகுமார், கே.வசந்தரூபன், எம்.ஜி.ரட்ணகாந்தன், எஸ்.கஜேந்திரகுமார் மற்றும் சிங்கள ஊடகங்களில் கடமையாற்றும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட 10 ஊடகவியலாளர்களுக்கும், சமூக சேவைகள் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றியவர்களுமாக 44 பேருக்கு இரத்தின தீப விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டு இரத்தின தீப விருதுகளை வழங்கி வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஊடகவியலாளர்கள் தனிப்பட்டவர்களை தாக்கி எழுதக்கூடாது எமது நாடு இன்று முப்பது வருடங்களாக யுத்த்தில் சிக்கி சீரழிந்துள்ளது மக்கள் இடம் பெயர்ந்துகொண்டுள்ளார்கள் நாங்கள் ஒருங்கிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

 சசி வவுனியா










வவுனியாவில் 10 ஊடகவியலாளர் உட்பட 44 பேருக்கு இரத்தின தீப விருது வழங்கி வைப்பு-Photos Reviewed by NEWMANNAR on October 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.