200 பெண்கள் திடீரென மயக்கம்! வைத்தியசாலையில் அனுமதி
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை சுமார் 10 மணியளவில் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் இவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
200 பெண்கள் திடீரென மயக்கம்! வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
October 05, 2017
Rating:
No comments:
Post a Comment