தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவராக வடக்கு முதல்வர்!
தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தலைவராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த தகவலை பசில் வெளியிட்டார்.
கடந்த மஹிந்த ஆட்சியின் போது வடமாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் பதிவியேற்றார். இந்த காலப்பகுதியில் தேசியம் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்ட கருத்துக்களால் தென்னிலங்கையில் எதிர்ப்பலைகள் ஏற்பட்டன. விக்னேஸ்வரனுக்கு எதிராக எதிர் கோஷங்களும், கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் பசில் ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பசில், தற்போது எதிர் தரப்பினர் என்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோன்று அப்போதைய எதிர்க்கட்சியினரும் விக்னேஸ்வரனுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருக்கலாம்.
எனினும் வடமாகாணத்தில் விக்னேஸ்வரன் மக்கள் மனங்களை வென்ற தலைவராக உள்ளார். ஏனைய தலைவர்களை விடவும் விக்னேஸ்வரனுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், வடக்கு, கிழக்கு மாணாங்களில் பசில் ராஜபக்ச பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவராக வடக்கு முதல்வர்!
Reviewed by Author
on
October 04, 2017
Rating:
No comments:
Post a Comment