அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் கடந்த 32 வருடங்களாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் பிரியாவிடை நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு-

மன்னாரில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கடந்த 32 வருடங்களாக அரச சேவையாற்றிய நிலையில் அவர் கடந்த 3 ஆம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ளும் நிலையில் அவருக்கான பிரியா விடை நிகழ்வை நடாத்த சக ஊழியர்களுக்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அனுமதி  மறுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னாரைச் சேர்ந்த பி.விஜயகுமார் என்பவர் கடந்த 32 வருடங்களாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி கடந்த 3 ஆம் திகதி ஒய்வு பெற்றுள்ளார்.

-அவரது சேவையை பாராட்டும் வகையில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற சக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் இணைந்து சேவை நலன் பாராட்டு மற்றும் பிரியா விடை நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

-எனினும் குறித்த நிகழ்வுகளுக்கான அனுமதியை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் கோரியிறுந்த போதும் குறித்த நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

-இந்த நிலையில் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து  கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனைவரும் கையொப்பமிட்டு  நேற்று(5) அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில்,,

மன்னாரில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தராக கடந்த 32 வருடங்கள் கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கும் பி.விஜயகுமார் மற்றும் 7 வருடங்கள் கடமையாற்றி யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் 10 பேரூக்கும் பிரியா விடை நிகழ்வுகளை நடத்த எமது நலன் புரிச்சங்கம் தீர்மானித்துள்ளமையினால் அதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-சக பணியாளர்கள் விசனம்-


மன்னாரில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் கடந்த 32 வருடங்களாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் பிரியாவிடை நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு- Reviewed by Author on November 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.