அண்மைய செய்திகள்

recent
-

இப்படி ஒரு சாதனையா? ஆச்சரியப்படுத்திய வயதான தம்பதி -


50 ஆண்டுகளாக ஒரே வீட்டு உபகரணங்களை மாற்றாமல் உபயோகப்படுத்திய வயதான தம்பதியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் எக்ஸிடர் நகரை சேர்ந்த தம்பதி சிட்னி மற்றும் ரச்சில் சவுண்டர்ஸ். இருவருமே 80 வயதை கடந்துவிட்டார்கள்.
இந்நிலையில், வயதான தம்பதி செய்த ஒரு ஆச்சரிய விடயம் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த 1950-களில் வாஷிங் மிஷின், பாய்லர், குக்கர், டம்பிள் டரய்யர் போன்ற வீட்டு உபகரணங்களை சிட்னியும், ரச்சிலும் வாங்கிய நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நவீன யுகத்தில் ஒரு பொருளை அடிக்கடி மாற்றி வருபவர்கள் மத்தியில் வயதான தம்பதியின் செயல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொருட்களை எல்லாம் அந்த காலத்தில் மொத்தமாக £146 விலைக்கு வாங்கியுள்ளார்கள்.
பாரம்பரியம் மிக்க வீட்டு உபகரணங்களை தற்போது விற்க சிட்னியும், ரச்சிலும் தயாராக இருக்கும் நிலையில் அதற்கு கிடைக்கும் பணம் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.

அதே நேரத்தில் பொக்கிஷத்துக்கு சமமான இந்த பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்தால் நல்லமுறையில் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை!
இப்படி ஒரு சாதனையா? ஆச்சரியப்படுத்திய வயதான தம்பதி - Reviewed by Author on November 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.