அண்மைய செய்திகள்

recent
-

கார்த்திகை இருபத்தியேழு.........உத்தமர்கள் திருநாள்


கார்த்திகை இருபத்தியேழு-27

கார்த்திகை இருபத்தியேழு
கண்ணுறங்கும் தமிழினமே விழித்தெழு
காலம் கடந்தும் போதும் அழுதது-ஈழக்
கனவுகள் உழுதது-மாவீரர்……

உயிர்கள் விதையாகி......
உணர்வே கதையாகி.......
உறவுகள் வதையாகி.......
உலகறியும் விடுகதையாகி........

கார்த்திகைப்பூக்கள்
எல்லாம் கதை பேசுது-சரித்திரம்
கண்ணீர் கனவுகளை
விதை தூவுது-விசித்திரம்

கடந்து வந்த பாதையிலே
நடந்ததெல்லாம் மறந்திடுமே-மனது
இறந்ததுவும் இழந்ததுவும்-எனது
இதயத்தின் நினைவு

உரிமைக்கு குரல் கொடுத்தோம்
உறவுகள்  இழந்து பரிதவித்தோம்
உணர்வுமட்டும் உள்ளத்திலே-நாம்
உலகத்தின் முற்றத்திலே……

சதியினாலே மதியிழந்தோம்
விதியினாலே எமையிழந்தோம்
அகதியெனும் முத்திரையோ
சகதியிலே நித்திரையோ ….தமிழா......

தரணியெங்கும் நீ கிடந்தால்-தமிழா.....
தரித்திரம் உனைத்தொடர்ந்தால்
தாங்கிடுவாளா தமிழ் அன்னை---நீ....
தாங்கவேண்டும் தமிழ் மண்ணை…..

மீண்டும் எழவேண்டும்-மாவீரர்களே
மீண்டு வரவேண்டும்-மாண்டுபோனதாய் தமிழீழம்
தோண்டும் துயிலுமில்லங்களில்-துயில்கலைந்து
நீண்டு செல்லும் நெடும்துயரையும் பகைவரையும்
கூண்டோடு தூர்வாரி உரிமை வென்று தேர் ஏறி

தொடுவானம் தூரம் இல்லை-
எடு நவீனவாளை நேரமில்லை
கொடு தமிழீழக்கரம் முல்லை
சூடு வெற்றி மாலை…..மாவீரர்......

கண்ணீர் பூக்கள்
கார்த்திகைப்பூக்களுக்காக
சிரம் தாழ்த்தி
கரம் சேர்ப்போம்-மாவீரர் தீரம் மனதிலே....

அண்ணனின் அகவை...இன்று
அறுபத்தி மூன்று
அடுத்தாண்டு இருபத்தியேழு…….
அகிலமே………………….பார்க்கும் வியந்து நின்று
 
-தமிழ்மாடு-

கார்த்திகை இருபத்தியேழு.........உத்தமர்கள் திருநாள் Reviewed by Author on November 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.