மன்னாரில் பெற்றோலை பெற்றுக்கொள்வதில் வாய்த்தர்க்கம்- நீண்ட வரிசையில் மக்கள்-(படம்)
மன்னாரில் பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மன்னார் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றிற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (6) காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் நின்றதுடன், எரிபொருள் நிரப்பும் பணியாளர்களுடன் வாகன உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
மன்னார் நகரில் மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் காணப்பட்டுள்ள போதும், அவற்றில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மாத்திரம் எரிபொருட்கள் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (6) காலை 11 மணி முதல் வாகன உரிமையாளர்கள் பெற்றோலினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்றதுடன், பெற்றோலை பெற்றுக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு காணப்பட்டனர்.
இதனால் பெற்றோலை வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு, பெற்றோலை போத்தல்களில் பெற்றுக்கொள்ள வந்தவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படாத நிலையில் அவர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களே காட்டிக்கொள்ளுவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் அனைவருக்கும் பெற்றோல் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும்,தம்மிடம் கையிறுப்பில் உள்ள பெற்றோல் வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மோட்டார் சைக்கில்,முச்சக்கர வண்டி மட்டும் கார் போன்றவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் வழங்கப்பட்டு வருவதாகவும், பாகு படுகள் இன்றி சமமான முறையில் பெற்றோல் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், மன்னார் நகரில் உள்ள மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்
மன்னாரில் பெற்றோலை பெற்றுக்கொள்வதில் வாய்த்தர்க்கம்- நீண்ட வரிசையில் மக்கள்-(படம்)
Reviewed by Author
on
November 07, 2017
Rating:
No comments:
Post a Comment