சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம்! தமிழர்களுக்கான பெருமை -
சிங்கப்பூரில் அரச கரும மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை தமிழர்களுக்கு பெருமையை தருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் பிரதானமானது. இதனாலேயே சிங்கப்பூரின் அரச கரும மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு பெருமையை தருகிறது.
இதேவேளை தமிழர்கள் அந்த நாட்டின் அரசியலுக்கு உச்ச நிலையில் பங்களிப்பு செய்துள்ளனர். இவ்வாறானவர்கள் அந்த நாட்டினால் மதிக்கப்படுகின்றனர்.
இந்த செயற்பாட்டை எமது நாட்டின் ஆட்சியாளர்களும், அதிக மக்கள் தொகையை கொண்ட இனத்தவரும் இதனை கற்றுக் கொண்ட பாடமாக எடுத்துக் கொண்டு தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரிய வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம்! தமிழர்களுக்கான பெருமை -
Reviewed by Author
on
November 11, 2017
Rating:
No comments:
Post a Comment