அண்மைய செய்திகள்

recent
-

சுவிற்ஸர்லாந்தில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்! மனதைக் கவரும் புகைப்படங்களுக்குக்கு கிடைத்த பரிசு -


சுவிற்ஸர்லாந்தில் Schweizer Bauernverbandஇன் 75ஆவது ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிப் போட்டியில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

சுவிற்ஸர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட சிவகுமார் கண்ணப்பன் என்பவருக்கே இதில் முதலிடம் கிடைத்துள்ளது.

15,000 புகைப்படங்கள் போட்டியில் வைக்கப்பட்டிருந்ததுடன், கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் Landschaften என்ற தலைப்பில் சிவகுமார் கண்ணப்பனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இதற்காக குறித்த இளைஞருக்கு St.Gallen நகரில் நடந்த Olma Messe விழாவில் பாராட்டும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



இதேவேளை, 2013 ஆண்டு Zürich Tag blatt பத்திரிகை நடாத்திய புகைப்பட போட்டியிலும் இவருக்கு முதலிடம் கிடைத்திருந்தது.
குறித்த இளைஞனுக்கு புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும், கிடைக்கும் நேரங்களில் கண்ட காட்சிகளை புகைப்படங்களாக எடுத்துள்ளார்.
தொடர்ந்து இவர் எடுத்த முயற்சிக்கு பலனாக சுவிற்சர்லாந்தில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.




சுவிற்ஸர்லாந்தில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்! மனதைக் கவரும் புகைப்படங்களுக்குக்கு கிடைத்த பரிசு - Reviewed by Author on November 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.