அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்க்கு நாடும் இல்லை.......இப்போ நல்ல வீடும் இல்லை........


பிறந்த நாடும்
வாழ்ந்த வீடும்-இன்றி இன்னொரு
சொந்தம் தேடும்-தமிழ் தலைமைகளின் தலையில்
தீப்பந்தம் வைக்கனும்

காலையில் தமிழனாகவும்
மாலையில் ஆங்கிலேயனாகவும்
இரவினில் சிங்களவனாகவும்+நாடகமாடி
பொழுதுகளை கழிக்கும் தலைமைகளே,,,,

30 வருட யுத்தம்
முடிந்த்தாம் சகாப்தம்-என்று
முழங்கிடும் முதலைகளே-இன்னும்
முடியவில்லை நித்தம்
மூத்த தமிழ்குடிகளின் உரிமை சத்தம்

சித்தம் தொலைத்து
பித்தம் பிடித்து-பதவிப்போதையில்
சுத்தும் தமிழினத்தலைமைகளே
சொத்துக்கும் பத்துக்கும் சுகத்துக்குமாய்-தமிழர் உரிமை
வித்துப்பிழைக்கும் வேடதாரிகளே.....

கூட்டுக்குடும்பமாய்  ஒற்றுமையாய்
ஓட்டு வீட்டினுள் இருந்தோம்
ஓட்டுக்காய் இப்போ ,,,வேற்றுமை பேசி -வீட்டை
ஓட்டையாக்கி விட்டு...வெளியே....

புரிந்துணர்வின்றி
புகுந்த வீட்டை விட்டுப்போகும்
புதிய மருமகளைப்போல
புதிய மருமகளைத்தேடும்--
புதிய மாப்பிள்ளைகளாய்......கட்ச்சிகள்...

தமிழர் விடுதலைக்கூட்டணி
அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்
தமிழ் ஈழவிடுதலை இயக்கம்
ஈழமக்கள் புரட்ச்சிகர விடுதலை முன்னணி

நான்கும் சேர்ந்து உருப்பெற்றது
தமிழ் தேசியக்கூட்டமைப்பு-22....இது
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு-இடையில்
தமிழரசுக்கட்சி இணைப்பு....

இதை விட இன்னும் வகை வகையாய்
ஈ பி-ஆர்-எல்-எப்
டெலோ.....
புளொட்......
தமிழ் மக்கள் பேரவை---
சுயேட்சையாக   இருக்கிறது ஏராளம்
இத்தனையும் போகுமா பாராளும்.


இத்தனை பிரிவுகள்
இருக்குமட்டும்
இருக்காது  நல்ல தெரிவு
இன்னும் பிறக்கவில்லையே பகுத்தறிவு

ஊழல் இல்லா,,,,
அரசியல் சார்பற்ற
ஆளுமைத்தன்மை
அனைவருக்கும் பொதுத்தன்மை கொண்டவர்களாக..... இளைஞர்களை

முதுமைகள் வழிவிட்டு
இளமைக்கு இடம்கொடுங்கள்
முதுமைகளின் ஞானம்
இளமைகளை இமயத்திற்கு உயர்த்தட்டும்
தமிழினம் தலைநிமிர்ந்து தனிவழியில்,,,,,

உள்ளுக்குள்ள ஊருப்ப்ட்ட பிரச்சினை
உலகநாடுகளும் அர்ச்சிணை
ஊழையிடும் நரிகளும்  செய்யுது கர்ச்சணை
உண்மை புரியாமல் தமிழர் உரிமை சம்பாசணை

நாட்டுக்குள்ளும் சண்டை
நமக்கு புரியல்ல
நமது  வீட்டுக்குள்ளும் சண்டை
நமக்கு தெரியல்ல
நாலுபேரும் நாலாபக்கம்
நாயைப்போல-நம்பிய தமிழ்மக்கள்
நாளும் பேயைப்போல........

கொள்ளையடிப்பதே
கொள்கையாகிப்போன பின்பு
வெள்ளை மனம் எங்கே
பிள்ளைக்குணம் எங்கே

அச்சமின்றி
பச்சோந்திகளாய்........தமிழ் தலைமைகள்
எச்ச சொகுசுகளுக்காய்-தமிழின்
மிச்ச உரிமைகளையும்-கொடுத்து
மச்சான் உறவுமுறை கொண்டாடும்
பிச்சக்காரை நம்பி -இருந்தால்
கச்சையும் மிஞ்சாது தம்பி.....

-தமிழ்மாடு-
தமிழர்க்கு நாடும் இல்லை.......இப்போ நல்ல வீடும் இல்லை........ Reviewed by Author on November 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.