அண்மைய செய்திகள்

recent
-

கைக்குழந்தையை தவிக்கவிட்டு தலைமறைவான தாய்! வவுனியாவில் சம்பவம்..!! (படங்கள்)


வவுனியாவில் பத்துமாத கைக்குழந்தையை தவிக்க விட்டு பெற்ற தாய் தலைமறைவான சம்பவம் ஒன்ற இடம் பெற்றுள்ளது.

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வசித்த வந்த சௌந்தராஜா விஜியலட்சுமி என்ற பெண்ணே கணவனையும் கைக்குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இது குறித்து வவுனியா பொலிசில் கணவனால் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட குறிப்பிட்ட பெண் கண்டி பிரதேசத்தை சேர்ந்த சௌந்தராஜனை காதலித்து திருமணம் முடித்துள்ளார்.

குழந்தை பிறந்ததன் பின் மகளைத்தேடி வவுனியா வந்த குறித்த பெண்ணின் தாயார் ஜாதியை காரணம் காட்டி தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்து அழைத்து சென்று விட்டதாக சௌந்தராஜன் தெரிவித்தார்.

தனது மனைவி விஜியலட்சுமி 11-11-2017 அன்று தன்னையும் குழந்தையையும் தவிக்கவிட்டு சென்று விட்டதாகவும் தனது மனைவியை கண்டுபிடிக்க பொலிசாரின் உதவியை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பால்மணம் மாறாத குழந்தை தாய்க்காக ஏங்கி அழுவதாகவும் இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊராக சென்று மனைவியை தேடி வருவதாகவும் தெரிவித்த அவர் யாராவது அவரை பார்த்தால் 0763219514 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.






கைக்குழந்தையை தவிக்கவிட்டு தலைமறைவான தாய்! வவுனியாவில் சம்பவம்..!! (படங்கள்) Reviewed by Author on November 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.