அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச மூத்த கலைஞர்கள் "கலைஞர் சுவதம்" கௌரவிப்பு நிகழ்வு....



மன்னார் பிரதேசத்தில் உள்ள மூத்த கலைஞர்களினைகலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின்  "கலைஞர் சுவதம்" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கௌரவிப்பு நிகழ்வானது  இன்று 14-12-2017 மாலை 3-30 மணியளவில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்நிகழ்வு மன்னார் பிரதேச செயலாளர்  M.பரமதாசன் அவர்களின் தலைமையில்  உதவி பிரதேச செயலாளர் திருமதி.K.சிவசம்பு அவர்களும் நிர்வாக அலுவலர் திரு.இராத பெர்னாண்டோ அவர்களும்
  பிரம்மஸ்ரீ தர்மகுமார குருக்கள் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார்  இவர்களுடன் மூத்த கலைஞர்கள்  இளங்கலைஞர்கள் மவட்டகலாச்சார உத்தியோகத்தர்கள் கலையார்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தலைமையுரையினை  M.பரமதாசன்பிரதேச செயலாளர்அவர்களும்
வரவேற்புரையினை  E.சுகிர்தா கலாச்சார உத்தியோகத்தர்அவர்களும்
ஆசியுரையினை பிரம்மஸ்ரீ தர்மகுமார குருக்கள் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் அவர்களும்
நன்றியுரையினை M.அபிராமி கலாச்சார உத்தியோகத்தர் அவர்களும்
நிகழ்ச்சி தொகுப்பினை K.வசந்தன் குடியேற்ற உத்தியோகத்தர் அவர்களும் நிகழ்த்தினர்
சிறப்பு நிகழ்வாக  தெரிவு செய்யப்பட்ட மூத்த கலைஞர்களான
  • திரு.த.பர்னாந்து பீரிஸ்
  • திரு.அம்புறோஸ் குலாஸ்
  • திரு.அ .இரத்தினசிங்கம்
  • ஜனாப் M.மக்கள்காதர்
  • திரு.பி.பெனில்டஸ்
  • திரு.அன்ரன் கூஞ்ஞ
  • திரு.M.ஆனந்தம் றோச்
  • திரு.கபிரியேல் இம்மானுவேல்
  • திரு.சவரியப்பு டயஸ்
  • திரு.செ.அந்தோனிப்பிள்ளை
இக்கலைஞர்களுக்கு கலைச்சேவையினை பாராட்டி
பாராட்டுச்சான்றிதழ் "கலைஞர் சுவதம்" கௌரவ விருதுடன் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

வை.கஜேந்திரன்

 































மன்னார் பிரதேச மூத்த கலைஞர்கள் "கலைஞர் சுவதம்" கௌரவிப்பு நிகழ்வு.... Reviewed by Author on December 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.