மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு-(படம்)
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்காக வேற்புமனுக்கல் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு இன்று திங்கட்கிழமை 18-12-2017 காலை முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் வீதிக்கு அருகில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டச் செயலகத்தினுள் செல்லுபவர்களது உடமைகளும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகலுடன் வேற்பு மனு தாக்கல் நிறைவடையவுள்ளது.இந்த நிலையிலே மாவட்டச் செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு-(படம்)
Reviewed by Author
on
December 18, 2017
Rating:
No comments:
Post a Comment