அண்மைய செய்திகள்

recent
-

உடல்நலக்குறைவால் பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி ....


உடல் நலக்குறைவால் பேரறிவாளன், சென்னை ராஜிவ் காந்தி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக நேற்று வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து சென்னை புழல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, ரத்த அழுத்தம், எலும்பு, நரம்பு தொடர்பான சிகிச்சை அளிப்பதற்காக ராஜிவ்காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உடல்நலக்குறைவால் பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி .... Reviewed by Author on December 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.