நாடு முழுவதும் வடகீழ் பருவப்பெயர்ச்சி நிலைபெறும்! வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் -
அடுத்து வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகீழ் பருவப்பெயர்ச்சி நிலைபெறுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டின் ஏனைய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு கனமழை பெய்யக்கூடும்.வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது ஓரளவு பலத்த காற்று (மணிக்கு 30-40km அளவில்) வீசக்கூடும்.மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளைகளில் பனியுடனான வானிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு” அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வடகீழ் பருவப்பெயர்ச்சி நிலைபெறும்! வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் -
Reviewed by Author
on
December 16, 2017
Rating:
No comments:
Post a Comment