மன்னாரில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிமசிங்க பங்கேற்பு-(படம்)
எதிர்வரும் 10 ஆம் திகதி இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபை ஆகியவற்றிற்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று 31-01-2018 புதன் கிழமை காலை 11 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது பிரதமர் ரணில் விக்கிமசிங்க, அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், ரி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினர்.
-இதன் போது மாகாண சபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிமசிங்க பங்கேற்பு-(படம்)
Reviewed by Author
on
January 31, 2018
Rating:
No comments:
Post a Comment