அண்மைய செய்திகள்

recent
-

நோய்களை தடுக்க வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள் -


"மருத்துவகுணங்கள் அதிகம் மருத்துவம் கொண்ட மூலிகைகளில் வேப்பிலை முக்கியத்துவம் பெறுகின்றது.
ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறுபட்ட நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன.
வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு கிடைக்கிறது.
சர்க்கரை நோய்
2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குளிர வைத்து, காலை, மதியம் மற்றும் மாலையில் குடிப்பதன் மூலமும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.
வயிற்று புழுக்கள்
குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடிக்க கொடுக்கலாம் இதனால் வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், அதிகம் உள்ளதால் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
வயிற்றுப் போக்கு
3 டம்ளர் நீரில், 5 வேப்பிலைகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அது குளிர்ந்த பின் வடிகட்டி, அதில் தேன் சிறிது கலந்து உடனே குடிக்க வேண்டும். அல்லது 3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளைப் போட்டு, 1 டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி, அந்நீரை காலை, மதியம் மற்றும் மாலையில் தேன் கலந்து குடிக்க வேண்டும் இவ்வாறு செய்வதானால் வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் தரும்.
மலேரியா
ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு ஒரு டம்ளர் நீராகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையிலும், மதிய வேளையிலும் குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்
சளி
சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அல்லது இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.
இரத்த ஓட்டம் சீராகும்
தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் அல்லது வேப்பிலை நீரைக் குடிப்பதால் இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
காயங்கள்
சிறிது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் காயம் உள்ள பகுதியைக் கழுவுங்கள். இதனால் வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டிரியல் பண்புகள், காயங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கும்.
ஹெபடைடிஸ்
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
கீல்வாதம்
வேப்பிலை கொழுந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் நல்ல பயனை பெறலாம்.
லுகேமியா
வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் 3 வேளை குடித்து வர நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வந்தால், லுகேமியாவில் இருந்து நல்ல தீர்வு கிடைத்திருப்பதை காண முடியும்.
பக்கவாதம்
தினமும் சிறிது வேப்பிலையை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
இதய நோய்
வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலம்
நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க வேப்பிலை தவறாது சாப்பிட்டு வர முடியும்.
சரும அலர்ஜி பிரச்சனைகள்
வேப்பிலை போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரால், சருமத்தைக் கழுவ வேண்டும். இதனால் விரைவில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
புற்றுநோய்
வேப்பிலையில் உள்ள அசாடிராக்ஸிடின் என்னும் பொருள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேப்பிலையை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.
எய்ட்ஸ்
வேப்பிலையில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் எய்ட்ஸ் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளது. வேப்பிலையில் உள்ள அசாடிராசிடின், வைரஸை அழிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த நச்சுப் பொருளாகும். ஆகவே தினமும் வேப்பிலை சாப்பிட்டால், எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கலாம்.

நோய்களை தடுக்க வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள் - Reviewed by Author on January 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.