அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜையினால் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கையளிப்பு-(படம்)

இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்தியசாலை தளபாடப்பொருட்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் என்பன வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஊடாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜையான பாலசுப்பிரமணியம் கதிர்கமநாதன் என்பவரினால் வழங்கப்பட்ட குறித்த பொருட்களே தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுகாதார அமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய தளபாடங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் என்பன  வைத்திய சாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர்,வைத்தியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜையினால் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கையளிப்பு-(படம்) Reviewed by Author on February 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.