அண்மைய செய்திகள்

recent
-

சின்னங்களுக்கு அல்ல நல் எண்ணங்களுக்கு....


சின்னங்களுக்கு அல்ல நல் எண்ணங்களுக்கு
ஊழல்செய்வோருக்கல்ல  கொள்கையோடு-தமிழ்
உணர்வோடு உள்ளவர்களுக்கு-எம்மினத்துக்காய்
உண்மையாய்  நேர்மையாய் உழைப்பவர்களுக்கு

உங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்குதான்
உள்ளூராட்ச்சி தேர்தல்-2018
உணர்ந்தால்-உடனே சென்று-அளியுங்கள்
உங்கள் வாக்கினை

உள்ளது கையில் வாக்கு
உடனே சென்று தாக்கு
துன்பம் போக்க..
தூய கரங்கள் எமது கிராமத்தினை காக்க.....

கொடி பிடித்து
வெடி கொழுத்தி
நடிக்கும் நாடகதாரிகளின்-வேடங்களை
நாடி அறிந்திருப்பாய்....தமிழா

தேடி வந்து தினம்
கூடிப்பேசி
மாடி வீடு வேலைவாய்ப்பு -இன்னும் பல
தாடி தடவி தருவதாக சொல்லியிருப்பார்

 தாகத்திற்கு இல்லாத தண்ணீர்
தேர்தல் காலங்களில்  கானல்நீர்
பத்து நாளும் தெளித்தது பன்னீர்-  சிலருக்கு
பதநீர் புதுநீர்-மறந்து விடாதே- நீ விட்ட கண்ணீர்

நீ தன்மானத்தமிழன் அல்லவா
தலைவணங்கமாட்டாய்.......!
விலைபோகமாட்டாய்...........!
என்றல்லவா.... எண்ணியிருந்தேன்

ஓரணியில் நின்றவர்கள் எல்லாம்
ஒவ்வொரு அணியாய் இன்று
ஒன்றை ஒன்று கொன்று தின்னும் விலங்குகலாய்.!
ஒற்றுமையில் வேற்றுமை கண்டு.!

ஓடித்திரியுதுகள் -தங்களை மறந்து
பாடித்திரியுதுகள்-தங்கள் நாற்றத்தினை
மூடிவைத்தவையெல்லாம் வெளியாகி
திடீர் முடிவுகளால்  ஏமாற்றத்தினை

தமிழ் தலைமைகள்-இனியும்.....
தமிழ் மக்கள் சிந்தித்தால்.......
தன்மானத்துடன் வாழ கனியும்
தமிழர் தேசம் வீசட்டும் உரிமை வாசம் கீராமத்திலிருந்து.....

 கவிஞர் வை.கஜேந்திரன்


சின்னங்களுக்கு அல்ல நல் எண்ணங்களுக்கு.... Reviewed by Author on February 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.