சம்மந்தனின் சதி வலையில் இருந்து தமிழ் மக்களை மீட்கவேண்டியது இன உணர்வாளர்களின் தார்மீகக்கடமை.
சம்மந்தனின் சதி வலையில் இருந்து தமிழ் மக்களை மீட்கவேண்டியது இன உணர்வாளர்களின் தார்மீகக்கடமை.
சின்னங்கள் அல்ல எண்ணங்களே முக்கியம்.
நிபந்தனை அற்ற ஆதரவால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி விடுதலைக்குப் போராடும் தமிழினத்தை அரசாங்கத்திடம் அடகுவைத்த கூட்டமைப்பை அடியோடு அகற்ற அணி திரள வேண்டும்.
கொள்கை. கோட்பாடு இலட்சியம் விடுதலை என்பவற்றுக்கு சாவுமணி அடித்து சரணகதி அடைந்துவிட்டவர்களை மன்னிக்க முடியுமா ?
கொள்கை பேசி வாக்கு கேட்க வக்கில்லாமல் போலி வேடமிட்டு புலி அரசியல் பேசுகிறார்கள் புலி நீக்க அரசியலுக்கு வழிவகுத்த இவர்களை தமிழின விடுதலைக்காக இலட்சியதாகத்துடன் உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் ஆண்மா இவர்களை மன்னிக்காமல் துரத்தும்.
வலி சுமக்காமல் வசதியாய் வாழ்ந்த சம்மந்தன் , சுமந்திரனின் அண்டப்புழுகு ம் ஆகாசப்புழுகு ம் அற்பத்தனமான பசப்பு வெற்று வாக்குறுதிகளும் . தமிழ்த்தேசிய அரசியலை மிகவும் பலவீனப்படுத்திவிட்டன .
"தமிழ்த்தேசிய நீக்கம் அல்ல தலைமை நீக்கம் அவசியம்"
இன்னுமொரு பத்தாண்டுகள் இன் நிலை தொடர்ந்தால் எச்சில் இலையுடன் கொழும்பில் பிச்சை எடுக்கும் நிலைக்கு இட்டுவிடுவார்கள் கூட்டமைப்பினர் .
விடுதலைப்புலிகளை வீழ்த்திய சதிகார ரணில் விக்கிரமசிங்கவை. நினைத்துக்கூட பார்க்க முடியுமா ?
அன்புக்குரிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களே .........
சிந்தியுங்கள்..........
தேசத்தை எதிரி அபகரித்து விட்டான் தேசியத்தையும் பாதகர்களிடம் பறி கொடுக்கலாமா ??????
அரசாங்கத்துடன் இணக்க அரசியல்
நடாத்தாத கொள்கைப்பிடிப்புடைய வலிமையான தலைமை உருவாக்க மாற்றம் அவசியம்......
கொள்கையா ? கூட்டமைப்பின் சரணகதி அரசியலா ? அபிவிருத்தி ஏமாற்றா????
உங்கள் வாக்கு தமிழ்மக்களின் இருப்பை காக்கும் கொள்கைக்காக இருக்கட்டும்.
நன்றிகள்.
வி.எஸ்.சிவகரன்.
தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு
சம்மந்தனின் சதி வலையில் இருந்து தமிழ் மக்களை மீட்கவேண்டியது இன உணர்வாளர்களின் தார்மீகக்கடமை.
Reviewed by Author
on
February 09, 2018
Rating:
No comments:
Post a Comment