வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஜனாதிபதி வருகையை முன்னிட்டு...
வவுனியாவிற்கு எதிர்வரும் 5ஆம் திகதி தேர்தல் பிரச்சார பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளதை முன்னிட்டு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,
அத்துடன் வீடுகள், வியாபார நிலையங்களில் உள்ளவர்களின் விபரங்களையும் பொலிஸார் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 5ஆம் திகதி காலை 10 மணியளவில் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அல்லது கலைமகள் விளையாட்டு மைதானத்தில் பரப்புரை கூட்டத்தினை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தலைமையில் இன்று வேட்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து நகரின் பாதுகாப்பினைப் பொலிஸார் பல மடங்கு அதிகரித்து வருகின்றனர்.
இதேவேளை தேர்தல் பரப்புரைக்கூட்டம் இடம்பெறவுள்ள மைதானத்தை அண்டிய பகுதிகளிலுள்ளவர்களின் விபரங்கள், நகரிலுள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் விபரங்கள் என்பன பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டு வருகின்றனர்.
வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஜனாதிபதி வருகையை முன்னிட்டு...
Reviewed by Author
on
February 03, 2018
Rating:
No comments:
Post a Comment