அண்மைய செய்திகள்

recent
-

3 மாதத்தில் 1000 குழந்தைகளை காவு வாங்கிய சிரியா: அதிர்ச்சி தகவல் -


இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சிரியா முழுக்க சுமார் 1000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ளது.

Unicef அமைப்பின் Christophe Boulierac என்பவர் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சி தகவலில், போர் உச்சத்தில் இருக்கும் Ghouta பகுதியில் அப்பாவி பொதுமக்கள் பதுங்கு குழிகள் போன்ற பகுதிகளில் உயிரை காக்க போராடி வருகின்றனர் என்றார்.
இதே பகுதியில் சுமார் 400,000 எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள் குடியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு தரப்பின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் சிக்கி பரிதவிக்கும் மக்களுக்கு அனுப்பப்பட்ட 14 லொறி உதவிகள் இதுவரை உரிய மக்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும்,

வியாழனன்று மேலும் சில எண்ணிக்கையிலான அவசர உதவி லொறிகள் Ghouta பகுதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் உச்சத்தில் இருக்கும் பகுதிகளில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள 9 மணி நேர கெடு போதுமானதாக இல்லை எனவும், அப்பாவி மக்கள் உயிருக்கு பயந்து இன்னமும் மறைவிடத்தில் அல்லாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

3 மாதத்தில் 1000 குழந்தைகளை காவு வாங்கிய சிரியா: அதிர்ச்சி தகவல் - Reviewed by Author on March 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.