மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு-(படம்)
மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று திங்கட்கிழமை(12) காலை 11 மணியளவில் மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்,வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வீதி, சுகாதாரம்,குடிநீர்,போக்குவரத்து,பாதுகாப்பு,விவசாயம்,நன்நீர் மீன் பிடி,கால்நடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதோடு,குறித்த பிரதேசத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் உற்பட மாதர்,கிராம அபிவிருத்திச் சங்கம்,கால்நடை,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு தாம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து குறித்த கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு-(படம்)
Reviewed by Author
on
March 13, 2018
Rating:
No comments:
Post a Comment