அண்மைய செய்திகள்

recent
-

மீன்பிடி குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு -


ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள விவசாய மற்றும் மீன்பிடி குடும்பங்களுக்கு விவசாய மற்றும் மீன்பிடி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

நோனாகம கலாச்சார நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், மண்வெட்டி, துவிச்சக்கர வண்டிகள், உயிர் காக்கும் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கவுள்ளது.

300 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இதன்போது கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்சிந் சிங் சந்து ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
மீன்பிடி குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு - Reviewed by Author on April 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.