சீனாவில் வாள்வெட்டு: 7 சிறார்கள் பலி, 12 பேர் படுகாயம்.
மேலும் குறித்த சம்பவத்தில் 12 சிறார்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் மிழி நகரில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணியளவில் பாடசாலைக்கு வெளியே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் சிறார்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
படுகாயமடைந்த சிறார்களை மீட்டு முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாடசாலை அருகே நின்றிருந்த குறித்த நபர் திடீரென்று மறைத்து வைத்திருந்த வாளை உருவி பாடசாலை சிறார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் வாள்வெட்டு: 7 சிறார்கள் பலி, 12 பேர் படுகாயம்.
Reviewed by Author
on
April 28, 2018
Rating:
No comments:
Post a Comment