அண்மைய செய்திகள்

recent
-

மாகாணங்களுக்கான அதிகார கட்டுப்பாடுகளால் - தமிழ் மக்களை முழுமையாக முன்னேற்ற முடியவில்லை; வடக்கு முதலமைச்சர்

மத்திய அரசாங்கத்தால் மாகாணங்களுக்கான அதிகாரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டமையினால் தமிழ் மக்களை முழுமையாக முன்னேற்ற முடியவில்லை என முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.  

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பொது அணியில் களமிறங்குவார் என எதிர் பார்க்கப்படும் நிலையில் அவர் இந்த கரு த்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவுடனான நட்பால், இந்தியா - இலங்கை இடையிலான ராஜதந்திர உறவுகள் முன்பு போல் இல்லை.
இந்தியா போன்ற வெளிநாடுகளில் அக திகளாக உள்ளவர்களை மீண்டும் அழைத்துவர பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கையின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களில் கட்டுப்பாடுகள் விதி க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக தமிழ் மக்களுக்கான தேவைகளை உரிய முறையில் நிறை வேற்ற முடியவில்லை என்றும் அவர் குறிப்பி ட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியா உட்பட வெளி நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கை ஏதி லிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்தைகள் முன்னெடுக்கப்படுவதாக வும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.     
  
மாகாணங்களுக்கான அதிகார கட்டுப்பாடுகளால் - தமிழ் மக்களை முழுமையாக முன்னேற்ற முடியவில்லை; வடக்கு முதலமைச்சர் Reviewed by Author on April 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.