அண்மைய செய்திகள்

recent
-

மே 18......சொந்தங்களும் கந்தக காற்றினிலே...


மே 18
மெய்யை தீயிலிட்டு
பொய் தீட்டு-உரிமை
உயிர் நம்மை விட்டு....

மேதினிலே
மேயினிலே வாய்பாடு
மேய்யினம் அரசியல் புல்லோடு
மேடையின் கீழ் கள்ளோடு

கொட்டி தீர்த்தாச்சு கொத்து குண்டுகளை
திட்டி தீர்த்தாச்சு வீதிகளில்
முட்டி மோதியாச்சு வெட்டி தலைவர்களுடன்
எட்டி மிதிச்சாங்க எல்லோரும்....,இனியும்

வேடமிட்டு
கூடும் கூட்டமே
நாடும் வேண்டாம்-எம்மை
நடிப்பினால்  நாடவும் வேண்டாம்

போனது போர் விட்டு
போர் மோகமும்  நம்மை தினம் சுட்டு
போராட்டம் அறவழி
போராடியும் தீராத வலி

 குண்டு போட்டு
கொன்று விட்டு-பல நாடு
சென்று பயங்கரவாதிகளை
வென்று விட்டோம் -என்று சொல்லி
தின்று சலுகைகளை
குன்றின் மேல் கழுகுகளே...
காலனின் மெழுகுகளே...

சுற்றமும் சுற்றி நின்று
வேடிக்கை பார்த்தது
சும்மாதான் என்று
பம்மாத்தாய் கேலி செய்தது

பயங்கரவாதிகளாய் சித்தரிக்கப்பட்டு
பன்னாட்டு நவீன ஆயுத்தால் கத்தரிக்கப்பட்டு
பாதுகாப்பாய் வெள்ளைக்கொடியுடன் கூப்பிட்டு
பட்டப்பகலிலும் இரவிலும் கழுத்தறுத்ததும்
கருவறுத்ததும் மறக்கமுடியுமா...



சொந்தங்களும்
கந்தக காற்றினிலே
சோகங்கள் எல்லாம்
வெந்த எம் உள்ளத்திலே......

வந்து போகின்றது
மே பதினெட்டு
தந்து போன வலிகளை
எந்தக்கடவுளாலும்
ஆற்றவும் முடியாது தேற்றவும் முடியாது

வலியின் வடிவத்தினை
வட்டமாநாடு கூடி
வேலி போட்டு-அரசியல்
விலைபேசி ஏப்பம் விடும்
வெளிநாடுகளே.......

முள்ளிவாய்க்காலும்
முல்லைத்தீவும்- சொல்ல முடியா...
வட்டுவாகலும் நந்திக்கடலும்
நீந்திக்கடந்தது இரத்தத்தில்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல
முதலில் விழுந்தோம்-இனி
முளைத்து எழுவோம்-எம்
முன்னால் எல்லாம் விழும்

இன்று நாம் அழுகின்றோம்-இனி
என்றும் சர்வதேசம் அழும்

-தமிழ்மாடு-



மே 18......சொந்தங்களும் கந்தக காற்றினிலே... Reviewed by Author on May 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.