புனித யோசப்வாஸ் அடிகளார் மன்னாருக்கு வந்து 331 ஆண்டுகள் நிறைவு(Mannar Landed In Rev.Fr.Joseph Vaz 331 Years Finish)
இந்தியா கோவா பெனொலிம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1651, நகரில்பிறந்தார்.கோவாவில் இருந்து ஒரேற்ரேறியன் குருவாகிய
யோசப்வாஸ் அடிகளார் கூலிபோல் மாறுவேடம் பூண்டு இலங்கையில் கரையோரப்பிரதேசமான மன்னார் தீவின் கிராமமான சாந்திபுரம் சௌத்பார் கடற்கரையில் 05-05-1687 முதன்முதலாய் கால்பதித்தார்.
அங்கு அவர் தனது சிலுவையினை நாட்டி திருப்பணியை ஆரம்பித்தார்
அத்தோடு இலங்கையின் பல பாகங்களிலும் மறைபணியாற்றி கண்டியில் 16-01- 1711 அகவை 59ல் இறைபாதமடைந்தார்.
இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
- 1995 ஜனவரி 21 ஆம் நாள் கொழும்பு நகரில் இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார்.
- 2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் காலிமுகத் திடலில் வைத்து புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.
புனிதருக்கான திருவிழா ஜனவரி மாதம் 16 கொண்டாடப்படுகின்றது
சுருக்கம்-வை.கஜேந்திரன்
புனித யோசப்வாஸ் அடிகளார் மன்னாருக்கு வந்து 331 ஆண்டுகள் நிறைவு(Mannar Landed In Rev.Fr.Joseph Vaz 331 Years Finish)
Reviewed by Author
on
May 06, 2018
Rating:
No comments:
Post a Comment