அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறை பங்கைச் சேர்ந்த 39 மாணவ மாணவிகளுக்கு மன்னார் ஆயரினால் உறுதி பூசுதல் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு-படம்

மன்னார் மறைமாவட்டம் சிலாவத்துறை தூய சவோரியார் பங்கைச் சேர்ந்த 39 மாணவ மாணவிகளுக்கு பங்குத் தந்தை அருட்பணி.செ.தவறாஜா அடிகளார் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) காலை உறுதி பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி .இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களினால் குறித்த மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாவத்துறை பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்திருந்தார்.

இதன் போது வருகை தந்த ஆயரை மக்கள் மோட்டார் சைக்கில்  பவனியோடு ஆலயத்தின் முன்  பிரதான வீதி வரை அழைத்து வந்தனர்.

அதன் பின் ஆயர் அவர்கள் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி மாலையிட்டு வரவேற்க்கப்பட்டார்.

தொடர்ந்து ஆயர் அவர்கள் இயேசுவின் விண்ணேற்ப்புப் பெருவிழாத் திருப்பலியை ஒப்புக் கொடுத்து பங்கிலிலுள்ள 39 மாணவ மாணவிகளுக்கு  உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கினார்.

குறித்த நிகழ்வில் சிலாவத்துறைப் பங்கில் உள்ளடக்கப்பட்ட கிளை ஆலயங்களான முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலய மக்கள், கயாக்குளி தூய யூதா ததேயு ஆலய மக்கள், கொக்குப்படையான் தூய யாகப்பர் ஆலய மக்கள், பொற்கேணி கார்மேல் மாதா ஆலய மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 













சிலாவத்துறை பங்கைச் சேர்ந்த 39 மாணவ மாணவிகளுக்கு மன்னார் ஆயரினால் உறுதி பூசுதல் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு-படம் Reviewed by Author on May 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.