தூத்துக்குடியில் தொடர் பதற்றம்: மேலும் ஒரு வாகனத்திற்கு தீ வைப்பு -
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் கலவரமாக மாறியுள்ளது.
போராட்டக்காரர்கள் தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 11 பேர் மரணமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக புதன் அன்று துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் பார்க்கச் சென்ற உறவினர்கள் மீது, பொலிசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் ஒரு இளைஞர் பலியானார். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் காவல் பணிக்கு வந்திருந்த பொலிசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே இருக்கும் பத்ரகாளி கல்யாண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திய காவல்துறை வாகனம் ஒன்றின் மீது இன்று மதியம் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர்.
ஆனால் பழைய காவல் வாகனத்திற்கு காவல்துறையினரே தீ வைத்து மக்களின் மேல் குற்றஞ்சாட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயை அணைக்கும் முயற்சி எதுவும் எடுக்கப்படாத நிலையில் அருகே இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இச்சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேலான பொலிசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் தொடர் பதற்றம்: மேலும் ஒரு வாகனத்திற்கு தீ வைப்பு -
Reviewed by Author
on
May 24, 2018
Rating:
No comments:
Post a Comment