அண்மைய செய்திகள்

recent
-

.தேசிய ரீதியில் முதலிடம்.....மன் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவி....


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான  கைப்பணிப்போட்டி மற்றும்  கண்காட்ச்சி கல்வியமைச்சு மற்றும்  தேசிய அருங்கலைகள் பேரவை  இணைந்து நடாத்திய சில்பா நவோதா- 2018  போட்டியில்

சிரேஸ்ர பிரிவில் பலதரபட்ட மூலப்பொருட்களின் கைப்பணிப்பிரிவில் சிப்பி ஓடுகள்  பிரிவில்  மன் அல்/அஷ்ஹர் தேசிய பாடசாலையின் உயர் தரம் கற்கும் மாணவி  பாத்திமா ஸல்மா நளர் நளர் அப்துல்லா அவர்கள்   புறாவும் குஞ்சும் கைப்பணிக்காக முதலாமிடத்தினை பெற்று  சான்றிதழும் 25000 பணப்பரிசும் பெற்று

மன்னார்  அல்/அஷ்ஹர் தேசிய பாடசாலைக்கும் மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

,இவரோடு சேர்ந்து  பாடசாலையை சேர்ந்த  இரண்டு மாணவர்களும் கைப்பணிப்போட்டியில் கணிஸ்ரப்பிரிவில்
  • பாத்திமா நப்லா -மெரிட்  பறவையும் குஞ்சும் கைப்பணிக்காக
  • N.M. அப்துல்லா- 3ம் இடம் டைனோசர் கைப்பணிக்காக பெற்றுள்ளனர்  இவர்களுக்கான  சான்றிதழும் பணபரிசும் வடமாகாணத்தில் வருகின்ற மாதம் வழங்கப்படவுள்ளது.
 இம்மாணவர்களுக்கும் வழிநடத்திய பாடசாலை சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

-வை.கஜேந்திரன்-
.தேசிய ரீதியில் முதலிடம்.....மன் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவி.... Reviewed by Author on May 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.