அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண நன்னீர் மீனவ சங்கங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு -


வடமாகாண நன்னீர் மீனவ சங்கங்களுக்கு நன்னீர் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வரவு செலவுகளைப் பேணுவதற்கு கணனி என்பன வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சியில் பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 13 மில்லியன் ரூபாவிற்கு, ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இருபது படகுகள், எட்டாயிரம் ரூபா பெறுமதியான 208 குல்லாக்கள், பன்னிரெண்டாயிரம் ரூபா பெறுமதியான 70 மீன் விற்பனை பேட்டிகள் மற்றும் 72 தராசுகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.சாய அமைச்சர் சிவநேசன், பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
வடமாகாண நன்னீர் மீனவ சங்கங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு - Reviewed by Author on May 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.