அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாடு போலீஸ், மோடி, பாஜக பற்றி நடிகர் விஷால் கோபமான கருத்து


இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் சுட்டதில் 3 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 நடிகர் விஷால் ட்விட்டரில் கோபமான கருத்தை பதிவிட்டுள்ளார். "50 ஆயிரம் மக்கள் ஒன்றாக போராடுகிறார்கள் என்றால் அதில் நிச்சயம் நியாயம் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி மௌனம் களைக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் போராடுவது தவறில்லை என்று பிஜேபி தான் சொல்கிறது. இந்த போராட்டத்தில் என்ன தவறு. மக்களுக்காகத்தான் அரசு, அரசுக்காக மக்கள் இல்லை" என விஷால் கூறியுளளார்.
தமிழ்நாடு போலீஸ், மோடி, பாஜக பற்றி நடிகர் விஷால் கோபமான கருத்து Reviewed by Author on May 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.