மன்னாரில் 8ஆவது நாளாகவும் தொடர்கின்றது-எலும்புக்கூடு அகழ்வு பணி பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு-படம்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று (6) புதன் கிழமை 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மோற்கோள்வதற்காக யாழ் பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.
-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை(6) காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர, விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்இசட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மைக்காலமாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகளில் மனித வளம் குறைவாக காணப்பட்டதை தொடர்ந்து இன்றைய அகழ்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்ச்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
மன்னாரில் 8ஆவது நாளாகவும் தொடர்கின்றது-எலும்புக்கூடு அகழ்வு பணி பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு-படம்
Reviewed by Author
on
June 07, 2018
Rating:
No comments:
Post a Comment