போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிர்ப்பணர்வு பேரணி-
சர்வதேச மது,போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 26-06-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் விழிர்ப்பணர்வு பேரணி இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் அனுசரனையுடன்,மன்னார் திருப்பு முனை புது வாழ்வகத்தின் ஏற்பாட்டில் 'மது போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம்' எனும் கருப்பொருளில் குறித்த விழிர்ப்பணர்வு பேரணி இடம் பெற்றது.
குறித்த விழிர்ப்புணர்வு பேரணியானது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் வலயக்கல்வி பணிமனைக்கு முன் ஆரம்பமானது.
-குறித்த பேரணியில் பாடசாலை மாணவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், மாந்தை மேற்கு பிரதேசச் செயலக அதிகாரிகள், மாதர்,கிராம அமைப்புக்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள்,பொலிஸ் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆண்டாங்குளம் வலயக்கல்வி பணிமனைக்கு முன் ஆரம்பமான பேரணி பிரதான வீதியூடாக சென்று ஆண்டாங்குளம் பொது மண்டபத்தை சென்றடைந்தது.
அதனைத்தொடர்ந்து விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிர்ப்பணர்வு பேரணி-
Reviewed by Author
on
June 27, 2018
Rating:
No comments:
Post a Comment