யாழில் சாதியின் பெயரால் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! தேரை இழுத்த jcb இயந்திரம் -
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் இன்று காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் புடை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.< இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வரணி சிமில் அம்மன் ஆலயத்தின் பல வருட இதிகாசங்களை கொண்ட பூர்வீக சிறப்பை இழிவுபடுத்தியுள்ளதாக அந்தப் பகுதி அடியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் இன்று காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் புடை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.< இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வரணி சிமில் அம்மன் ஆலயத்தின் பல வருட இதிகாசங்களை கொண்ட பூர்வீக சிறப்பை இழிவுபடுத்தியுள்ளதாக அந்தப் பகுதி அடியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழில் சாதியின் பெயரால் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! தேரை இழுத்த jcb இயந்திரம் -
Reviewed by Author
on
June 08, 2018
Rating:
No comments:
Post a Comment