அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கச்சேரிக்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் கூடாரம் அமைத்து போராட்டம்-படம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள்  வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

-மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஓன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடரங்களை அமைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதங்களில் இடம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நோர்முகத் தோர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கே இன்னமும் ஒழுங்கான பதிலே நியமனங்கள்  வழங்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

 அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நோர்முக தோர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதற்காக எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போதும் தங்களை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை எனவும் இவ் செயற்பாடானது பட்டதாரிகளாகிய தங்கள் மத்தியில் பாரிய மன உளை ச்சளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தொரிவித்தனர்.

குறித்த போராட்டமானது இன்றுடன் நிறைவடைவதும் அல்லது தொடர்ச்சியாக நடைபொறுவதும் அரசாங்கத்தின் கைகளில் தான்  உள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
 





மன்னார் கச்சேரிக்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் கூடாரம் அமைத்து போராட்டம்-படம் Reviewed by Author on June 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.