அண்மைய செய்திகள்

recent
-

ஆண்மை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் ஜாதிக்காய் !


"ஜாதிக்காய் என்பது பாலுணர்வை தூண்டும் ஒரு முக்கிய பொருளாக பல நூற்றாண்டுக்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஜாதிக்காயை எப்படி உபயோகப்படுத்த வேண்டுமோ அப்படி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விபரீதம் ஆகிவிடும்.
ஜாதிக்காயை ஆண்மை குறைவிற்கான மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.


ஜாதிக்காயை மிதமான சூட்டில் நெய் ஊற்றி நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். இதனை மிக்சியில் சுற்றி பொடியாக வைத்து கொள்ளவும். இதுதான் ஜாதிக்காய் போடி தயாரிக்கும் முறை.
இந்த பொடியை தினமும் காலையிலும் மாலையிலும் ஐந்து கிராம் அளவில் எடுத்து கொண்டு பசும்பாலில் காய்ச்சி குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நீர்த்து போன விந்தணுக்களை கெட்டிப்படுத்தவும், உயிரணுக்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.

ஜாதிக்காயிலும் ஜாதிபத்திரியிலும் எளிதில் ஆவியாக கூடிய எண்ணெய் 15 % உள்ளது. இவற்றில் மிட்ரிசின் எனும் மூல பொருள் அதிக அளவில் உள்ளது.

ஜாதிக்காயையும் சந்தனத்தையும் ஒன்றாக அரைத்து பருக்கள் மீதும் , கரும்புள்ளிகள் மீதும் பூசி வந்தால் விரைவில் அவை மறைந்து முகம் பொலிவாக மாறும்.
வெறும் ஜாதிக்காயை அரைத்து தடவினால் படை, தேமல், சிரங்கு போன்றவை குணமடையும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதிக்காய் சீரகம் சுக்கு ஆகியவற்றை பொடி செய்து உணவிற்கு முன் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள் தணிய ஆரம்பிக்கும்.
அதிகம் ஜாதிக்காய் சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
ஆண்மை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் ஜாதிக்காய் ! Reviewed by Author on July 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.