கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1.75 கோடி வழங்குகிறது பேஸ்புக் -
100 ஆண்டுகளில் இல்லாத அளவு அழிவை சந்தித்துள்ள கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் ரூ.1.75 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கவுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவன ஊடகத்தொடர்பாளர் கூறுகையில், கடந்த சில நாள்களில் ஃபேஸ்புக்கின் லைவ் வீடியோ, குரூப்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலரும் உதவி வருகின்றனர். இதில் நாங்கள் ஒரு சிறிய பங்காக 2,50,000 டாலர்களை GOONJ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1.75 கோடி வழங்குகிறது பேஸ்புக் -
Reviewed by Author
on
August 22, 2018
Rating:
No comments:
Post a Comment