இத்தாலியில் பலரின் உயிரை பலி வாங்கிய பயங்கர விபத்து!
இத்தாலியில் கடந்த 1960-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேம்பாலத்தில் ஒரு பகுதி கடந்த 14-ஆம் திகதி நண்பகலில் உடைந்து விழுந்தது.
மேம்பாலத்தில் பயணித்த பல கார்கள் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டன.
இந்நிலையில், நேற்று வரை 38 பேர்கள் இதுவரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரான்ஸ் வெளிநாடுகளுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீஸ் நகரில் இருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எல்லையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உதவுவதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. உயிரிழந்த மூன்று பிரான்ஸ் குடியுரிமை கொண்டவர்களும் 20 வயதுடையவர்கள்.
மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன் 'எவ்வித உதவிகளும் செய்ய தயார் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் பலரின் உயிரை பலி வாங்கிய பயங்கர விபத்து!
Reviewed by Author
on
August 16, 2018
Rating:
No comments:
Post a Comment