அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் தலைநகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனின் மகனின் மோட்டார் வாகனம் -


தமிழர் தலைநகரான திருகோணமலையில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் என்டடியால் பாவிக்கப்பட்டதாக கூறப்படும் மோட்டார் வாகனம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

All Terrain Vehicle(ATV) எனப்படும் இந்த மோட்டார் வாகனமும், அதன் விபரங்களும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வாகனத்தை அட்மிரல் ஜெயந்த கொலம்பகே முல்லைத்தீவு கடற்படை தளத்திற்கு ஒப்படைத்து, பின்னர் கிழக்கு மாகாண கடற்படை தலைமையக அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
40” அகலமும், 77” நீளமும், 43” உயரமும் கொண்டு குறித்த மோட்டார் வாகனம் காணப்படுகின்றது.
இங்கு வரும் பலரும் குறித்த மோட்டார் வாகனத்தை பார்வையிட்டு செல்வதுடன், புகைப்படங்கள் எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.


தமிழர் தலைநகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனின் மகனின் மோட்டார் வாகனம் - Reviewed by Author on August 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.