தொண்டையை பாதுகாக்க சிறந்த வழிகள்.. -
சிலருக்கு பேசிக்கொண்டே சாப்பிடும்போது தீடிரேன புரையேறுதல் ஏற்படும். இதற்கு காரணம் சாப்பிடும் போது பேசுவதால் சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். எனவே, சாப்பிடும்போது பேசுவதை தவிர்க்கவும்.
உணவை வேகவேகமாக விழுங்கும் போது தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதனையெ நெஞ்சு எரிச்சல் என்போம். எனவே வேக வேகமாக உணவு உண்பதை முற்றிலும் தவிர்க்கவும்.
தொண்டைப் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்.எனவே புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.
சில சமயங்களில் உண்ணும்போது காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
சளி, இருமலால் தொண்டையில் வலி மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். தொண்டைக் கட்டு குணப்படுத்த வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது நல்லது.
குறட்டை வருவதற்கு முக்கிய காரணம் தொண்டையில் இருந்து காற்று வெளியேறும் பொழுது அங்கு தடை ஏற்படுவதே. இதற்கு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
அதிக சூடு மற்றும் அதிகம் குளிர்ச்சி நிறைந்த உணவுகளினால் தொண்டையில் பாதிப்பு ஏற்படலாம். எனவே இதனை தவிர்க்க மிதமான சூடுள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.
தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது கழுத்துப் பகுதி வீக்கத்திற்கு முக்கிய காரணம். மேலும் குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் இருக்கும் போது வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக் செய்யலாம்.
தொண்டையை பாதுகாக்க சிறந்த வழிகள்.. -
Reviewed by Author
on
August 14, 2018
Rating:
No comments:
Post a Comment