சுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை..
சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே அப்பகுதியில் குவிந்த மக்கள் பொலிசார் மீது போத்தல்களை தூக்கி வீசியுள்ளனர். ஒருகட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய பொலிசார் பின்னர் ரப்பர் குண்டுகளையும் பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.
சிட்டி சென்டர் அருகே பொலிஸ் குவிக்கப்பட்டதற்கும் குவிந்த பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கும் பொலிசார் இதுவரை விளக்கமளிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் சூரிச் அறோ பகுதியில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையால் குடும்பத்தில் இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியதாகவும்,
மேலும் குடும்ப உறுப்பினர் அடி காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இதனைத் தடுக்க வந்த சுவிஸ் பிரஜை ஒருவரையும் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பக் கலவரம் வீதிக்கு வந்ததாலையே சிட்டி செண்டர் பகுதியில் அதிரடியாக பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை..
Reviewed by Author
on
August 20, 2018
Rating:
No comments:
Post a Comment