அண்மைய செய்திகள்

recent
-

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் பச்சரிசி:


நமக்கு தெரிந்தே நாம் செய்த பாவங்களையும் தெரியாமல் செய்திருக்கும் பல பாவங்களையும் மற்றும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் போக்குவதற்கென்றே பச்சரிசி பரிகாரங்கள் இருக்கின்றது.
செய்ய வேண்டிய பரிகாரம்
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் எழுந்து குளித்து பின் ஒரு கை நிறைய பச்சரிசியை அள்ளிக் கொண்டு சூரிய பகவானை பார்த்த படி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
  • பின்னர் அந்த அரிசியை அப்படியே உங்கள் உள்ளங்கையில் மூடி வைத்து கொண்டு பின் வீட்டில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
  • அதன்பின்பு விநாயகர் சிலையைச் சுற்றி இந்த பச்சரிசியைத் தூவி விட வேண்டும். இப்படி நாம் போட்ட பச்சரிசிகளை அனைத்தையும் எறும்புகள் தூக்கிச் சென்றுவிட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும்.
நன்மைகள்
  • எறும்பினுடைய எச்சிலானது பச்சரிசியின் மீது பட்டுவிட்டாலே போதும், பச்சரிசிக்கு கெட்டுப் போகும் தன்மையானது நீங்கிவிடும்.
  • இப்படி செய்வதால் இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலைகள் அனைத்தும் மாறும் போது நாம் செய்யும் பாவங்களின் குறைந்து போகும்.
  • மேலும் நாம் அடிக்கடி எறும்புகளுக்கு அரிசி இரையாகப் போடுவதால் விரைவில் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று சொல்வார்கள்.
  • ஒரு எறும்பு நாம் போடுகின்ற பச்சரிசியைச் சாப்பிட்டால், 108 பிராமணர்களுக்கு அன்னதானம் போட்டதற்கு சமம். மேலும் இப்படிச் செய்வதன் மூலமாக, சனி பகவானின் தொல்லைகள் கூட உங்களை நெருங்காது.
  • எறும்புக்கு அரிசி போடுவதன் மூலம் அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச்சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் தீங்குகளும் உங்களை நெருங்காது.

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் பச்சரிசி: Reviewed by Author on September 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.