அண்மைய செய்திகள்

recent
-

மழை வெள்ளத்தை தொடர்ந்து கேரள மக்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி -


வரலாறு காணாத மழை வெள்ளத்தை தொடர்ந்து கேரளாவில் பெரியளவில் வறட்சி ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரு வெள்ளம் மாநிலத்தைப் புரட்டிப் போட்டது.

இதிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வருகிறார்கள். இந்நிலையில் கேரளா இப்போது மிகப் பெரிய வறட்சியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் இயல்பை விட 86% குறைந்த அளவிலான மழையையே அங்கு பெற்றுள்ளதாம். அதாவது மொத்தமே 7.9 மில்லி மீட்டர் அளவிலான மழைதான் பெய்துள்ளதாம்.

பெரு வெள்ளத்தால் மேல் மண் பெரிய அளவில் அடித்துச் செல்லப்பட்டு விட்ட நிலையில் நிலத்தடி நீரும் பெருமளவில் குறைந்துபோயுள்ளதால் இந்த குறைந்த மழைப் பொழிவு வறட்சிக்கே வித்திடும் என்று கூறுகிறார்கள்.
இன்னும் மோசமான ஒரு செய்தியாக வெப்ப நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் இப்போதே வறட்சி தென்படத் தொடங்கி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மழை வெள்ளத்தை தொடர்ந்து கேரள மக்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - Reviewed by Author on September 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.