அண்மைய செய்திகள்

recent
-

மேற்கத்தைய நாடுகளிடமிருந்து மனித உரிமைப் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியதில்லை -


மேற்கத்தைய நாடுகளிடமிருந்து மனித உரிமைப் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏகல புனித மெத்யூஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று நடைபெற்ற திருப்பலி பூஜையில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மேற்குலக நாடுகளில் மனித உரிமைகள் மதமாக மாற்றமடைந்துள்ளன. அண்மையிலேயே மனித உரிமைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனினும் இலங்கையில் பல நூற்றாண்டுகளாக மத விழுமியங்களின் ஊடாக மனித உரிமைகள் போற்றப்படுகின்றன.

சரியான முறையில் நாம் வாழ்ந்தால் மனித உரிமைகள் எதுவும் தேவையில்லை. மத வழிபாடுகளில் உரிய முறையில் முன்னெடுக்காதவர்களே மனித உரிமைகளில் தொங்கி நிற்கின்றார்கள்.
இந்த ஈர்ப்புக்களினால் நாம் திசை மாறி விடக் கூடாது. பல் மதங்களைக் கொண்ட இலங்கையில் நூற்றாண்டுகளாக மனித உரிமைகள் பேணப்பட்டு வருவதாகவும், மேற்குலக நாடுகள் இலங்கைக்கு மனித உரிமைகள் குறித்து பாடம் புகட்ட முயற்சிப்பதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேற்கத்தைய நாடுகளிடமிருந்து மனித உரிமைப் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியதில்லை - Reviewed by Author on September 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.