அண்மைய செய்திகள்

recent
-

மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணம் வழங்கி வைப்பு-படம்

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், லைகாவின் ஞானம் அறக்கட்டளை முன்னெடுக்கும் நிவாரண நடவடிக்கை  29-11-2018 வியாழக்கிழமை மதியம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக கொழும்பில் பொதியிடும் நடவடிக்கைகள் இடம் பெற்று, நிவாரண பொதிகள் தாங்கிய முதலாவது வாகன தொடரணி  29-11-2018 (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி வருகை தந்துள்ளது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதீக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு என ஒரு தொகுதி நிவாரணப்பொருட்கள் மடு பிரதேசச் செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் தச்சனா மருதமடு மற்றும் பாலம்பிட்டி ஆகிய கிராமங்களில் கஜா புயலினால் பாதீக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கும் வகையில் ஆராம்ப நிகழ்வு  இன்று வியாழக்கிழமை மதியம் மடு பிரதேசச் செயலகத்தில் மடு பிரதேசச் செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மடு பிரதேசச் செயலக அதிகாரிகள்,அரசியல் பிரதி நிதிகள் லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணக் குழுவினருடன் இணைந்து நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தனர்.






மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணம் வழங்கி வைப்பு-படம் Reviewed by Author on November 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.