அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இலங்கைப் பெண்கள் -


வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற நான்கு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திற்கு பணிக்காக சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொது மக்களிடம் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

காணாமல் போனவர்கள் விபரங்கள் பின்வருமாறு,
நுகதெனிய பிரதேசத்தை சேர்நத நவாஸ், என்பவர் 02-11-2016 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.
தலகொஸ்வெட்ட பிரதேசத்தை உதயகுமாரி என்பவர் 02-11-2016 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.
அரவத்தை பிரதேசத்தை சிறியாவத்தி என்பவர் 17-02-2014 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த திலக்கனி பீரிஸ் என்பவர் 02-02-1995 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.
இவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் 0114380954/ 0112878244 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.



வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இலங்கைப் பெண்கள் - Reviewed by Author on November 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.