மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்
மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில்
நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் மாணவி A.R. ரைஷா பர்வின் உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் 1ம் இடத்தினைப்பெற்றுள்ளார்.
திரு.அப்துல் ரஹுமான் திருமதி நூர்ஜஹான் தம்பதிகளின் புதல்வி செல்வி A.R.ரைஷா பர்வின் மாவட்ட நிலையில் முதலிடத்தினையும் தேசிய ரீதியில் 666ம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமைசேர்த்துள்ளார்.
அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......
எதிர்கால இலக்கு-சிறந்த மகப்பேற்று நிபுணராக-VOG வருவதே என்றார்.(மன்னார் மக்களின் பெரிய பிரச்சினைகளில் முக்கியமானது VOG-இந்தப்பற்றாக்குறை)
எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,அல்லாவினை நினைவில் கொள்கின்றேன்..
A.R.ரைஷா பர்வின் இம்மாணவியை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்
Reviewed by Author
on
December 30, 2018
Rating:
No comments:
Post a Comment