மீண்டும் தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!
நேற்றைய தினம் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் தேசிய ரீதியிலான மேசை பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.
போட்டியில் 15 வயது பிரிவு மகளீருக்கான போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவியே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
காலிறுதிப் போட்டியில் கேகாலை மாவட்டப் போட்டியாளரையும், அரையிறுதி போட்டியில் கொழும்பு மாவட்ட போட்டியாளரையும், இறுதி போட்டியில் அனுராதபுரம் மாவட்ட போட்டியாளரையும் வெற்றிகொண்டே தேசிய ரீதியில் வெற்றியாளர் ஆனார்.
கடந்த வருடம் தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டியின் போதும் தேசிய ரீதியில் முதலிடத்தை இந்த வீராங்கனை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!
Reviewed by Author
on
December 31, 2018
Rating:
No comments:
Post a Comment